ஒன்றரை வயது மகளை கொன்ற தந்தை

Subscribe to Oneindia Tamil

பரமக்குடி:

உறவினர்களைப் பழி தீர்ப்பதற்காக, தனது ஒன்றரை வயது மகளை தகப்பனே கொன்ற கொடூர சம்பவம்பரமக்குடியில் அரங்கேறியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அருகே உள்ள தெற்குப்பட்டியை சேர்ந்தவர் பூமிநாதன். இவருக்கும்இவரது உறவினர்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. தனது உறவினர்களை பழி தீர்ப்பதற்காகபூமிநாதன் யாரும் செய்யத் துணியாத பாதகத்தை தான் செய்யத் துணிந்தார்.

மகளைக் கொன்றுவிட்டு அவளை உறவினர்கள் கொலை செய்ததாக பழி போடத் திட்டமிட்டார்.

நேற்றிரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது ஒன்றரை வயது மகள் வினோத நந்தினியை அரிவாளால் கழுத்தைஅறுத்து கொலை செய்தார், பிறகு குழந்தையின் உடலை அருகில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே போட்டுவிட்டார்.

காலையில் குழந்தையின் பிணத்தை பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இது குறித்து போலீசார்விசாரணை நடத்தியபோது. தனது பிள்ளையை தானே கொன்றுவிட்டு, பழியை உறவினர்கள் மீது போடதிட்டமிட்டதாக பூமிநாதன் உண்மையை ஒத்துக் கொண்டார். இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

ஒன்றரை வயது நிரம்பிய மகளை பெற்ற தகப்பனே கொலை செய்திருப்பது பரமக்குடி வட்டாரத்தில் பெரும்அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+