4 ஊராட்சிகள் நகராட்சிகளாகின !
சென்னை:
கடந்த மாதம் ஊராட்சிகளாக தகுதி குறைக்கப்பட்ட 4 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தகுதிஉயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, தமிழகத்தில் உள்ள 611 பேரூராட்சிகளில் 566 பேரூராட்சிகள், ஊராட்சிகளாக தகுதிகுறைக்கப்பட்டன, மற்ற பேரூராட்சிகள் நகராட்சிகளாக தகுதி உயர்த்தப்பட்டன.
மாவட்ட தலைநகரமாக இருந்த பெரம்பலூர், நகராட்சியாக தகுதி உயர்த்தப்படாமல், ஊராட்சியாக தரம்குறைக்கப்பட்டதால் அந்த மாவட்ட மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதைக் கண்டித்து பந்த்தும் நடத்தினர்.
இந் நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், பெரம்பலூர், திருச்சி மாவட்டம் துவாக்குடி,கோவை மாவட்டம் பல்லடம், காஞ்சிபுரம் மாவட்டம் புழுதிவாக்கம் ஆகிய 4 ஊராட்சிகளும் 3ம் நிலைநகராட்சிகளாக தகுதி உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது.
இன்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications