பிள்ளையார்பட்டி: பக்தர்களிடம் பணிந்தது அரசு

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் திட்டமிட்டபடி வருகிற 8ம் தேதிகும்பாபிஷேகம் நடத்தப்படும் என தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் 16 கோயில்களின்கும்பாபிஷேகத்தை ஒரு ஆண்டு வரை தள்ளி வைத்து தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை உத்தரவிட்டது.

இதற்கு பிள்ளையார்பட்டி பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் கும்பாபிஷேகப் பணிகளைநடத்தி வந்த பிள்ளையார்பட்டி நகரத்தார் அறக்கட்டளை நிர்வாகம் கும்பாபிஷேகம் தள்ளிவைக்கப்பட்டதற்குஎதிர்ப்பு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து அரசின் தடையை மீறி திட்டமிட்டபடி 8ம் தேதி கும்பாபிஷேகத்தை நடத்துவது எனஅறக்கட்டளை முடிவு செய்தது. கும்பாபிஷேகத்திற்கான பூஜைகளும் தொடங்கப்பட்டன. இதனால் அதிர்ச்சிஅடைந்த இந்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் பிள்ளையார்பட்டி விரைந்தனர்.

அங்கு அறக்கட்டளை நிர்வாகிகள், பொதுமக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.கும்பாபிஷேகத்தை தள்ளிவைக்கும் முடிவை ஏற்கவே முடியாது என்று அனைத்துத் தரப்பினரும் திட்டவட்டமாகதெரிவித்து விட்டனர்.

இதனால் வேறு வழியின்றி, திட்டமிட்டபடி 8ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தலாம் என இந்து அறநிலையத் துறைஒப்புதல் வழங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+