ஆளுநர்கள் நீக்கம் தவறில்லை: வாசன்
வேலூர்:
ஆளுநர்களை மாற்றுவதில் எந்தத் தவறும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் கூறினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் இருந்து மேலும் தண்ணீர் திறந்து விட வேண்டும். அப்போதுதான் தமிழககாவிரி டெல்டா விவசாயிகளின் பிரச்சினை தீரும்.
முத்திரைத்தாள் மோசடி வழக்கில் உயர் போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகையநடவடிக்கைகள் மூலம் மோசடிகள் மீண்டும் நடக்காது தடுக்க முடியும்.
ஆளுநர்கள் மாற்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசால்தான் செய்யப்பட்டு உள்ளது. இதில் தவறேதும்இல்லை. அகில இந்திய அளவில் இப்போது பெரிய பிரச்சினைகள் இல்லாத காரணத்தினால் பா.ஜ.க.வினர் இதைப்பிரச்சினையாக்கி அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார்கள்.
அகில இந்திய அளவில், மாநிலங்கள் அளவிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் மாற்றம் விரைவில் அறிவிக்கப்படஉள்ளது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பின்னர் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவேன்.
முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து சலுகைகளை அறிவிப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற்றுவிடலாம்என்று நினைக்கிறார். ஆனால் தமிழக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.
மக்கள் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் குரல் கொடுத்து வருகிறோம். தேவை ஏற்பட்டால் போராட்டம்நடத்துவோம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications