அலியின் மகன்களையும் விசாரிக்க சிபிஐ முடிவு
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் தைகாகியுள்ள டிஐஜி முகம்மது அலியின் மகன்களையும் விசாரிக்க சிபிஐமுடிவு செய்துள்ளது.
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைதாகியுள்ள டிஐஜி முகம்மது அலியிடம் நான்கு நாட்கள் சிபிஐஅதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் விசாரணையின்போது முகம்மது அலி சரிவர ஒத்துழைக்கவில்லைஎன்று தெரிகிறது.
இதையடுத்து முகம்மது அலியின் சொத்துக்கள் குறித்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.
அலியின் மகன்கள் சதக்கத்துல்லா, பைசல் ஆகிய இருவரையும் விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. இதில்சதக்கத்துல்லா அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக உள்ளார்.
பைசல் சிங்கப்பூரில் உள்ளார். முகம்மது அலியின் லஞ்சப் பணத்தில் சிங்கப்பூரில் பைசல் சொத்துக்கள்வாங்கியிருப்பதாக சிபிஐ கூறுகிறது.
இதையடுத்து இந்த இருவரையும் இந்தியாவுக்கு வரச் சொல்லி சிபிஐ சம்மன் அனுப்பும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications