கொழும்பு: பெண் தற்கொலைத் தாக்குதல்- 5 பேர் பலி
கொழும்பு:
கொழும்பில் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒரு பெண் நடத்திய குண்டு வெடிப்பில் அந்தப்பெண்ணும், 4 போலீசாரும் பலியாயினர்.
புலிகளின் தீவிர எதிர்ப்பாளரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்துக்குள்செல்ல அந்தப் பெண் முயன்றபோது பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.
அந்தப் பெண்ணை போலீசாரிடம் பாதுகாவலர்கள் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரைபோலீசார் அருகில் உள்ள கொள்ளுப்பிட்டி காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
அவரது உடலை போலீசார் சோதனையிட முயன்றபோது அந்தப் பெண் உடலில் கட்டியிருந்தகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் அந்தப் பெண்ணும், 4 போலீசாரும் அந்த இடத்திலேயேதூள், தூளாக சிதறினர்.
மேலும் 12 போலீசார் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் நடந்த இடம் மிக, மிகப் பாதுகாப்பான பகுதியாகும். பிரதமரின்அதிகாரப்பூர்வமான இல்லமான டெப்பிள் ட்ரீ, அமெரிக்க, பிரிட்டிஷ் தூதரகங்கள் ஆகியவைஇங்கு தான் அமைந்துள்ளன.
சம்பவம் நடந்தபோது பிரதமர் மகிந்தா ராஜபக்சே அருகாமையில் உள்ள தனது இல்லத்தில் தான்இருந்தார்.












Click it and Unblock the Notifications