நாளை பிள்ளையார்பட்டி கும்பாபிஷேகம்
பிள்ளையார்பட்டி:
காரைக்குடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர்திருக்கோவிலில் நாளை (8ம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதையொட்டி கோலாகலமான ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேகம் செய்வது எனமுடிவு செய்து கடந்த பல மாதங்களாகவே கோவில் புணரமைக்கப்பட்டு வந்தது.
ஆனால், இந்தக் கோவிலின் கும்பாபிஷேகத்தை தள்ளி வைப்பதாக தமிழக அரசு உத்தரவிட்டது.இதை கோவில் நிர்வாகிகள் ஏற்கவில்லை. திட்டமிட்டபடி நடத்துவோம் என அறிவித்துவிட்டனர்.இதையடுத்து அரசு பணிந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் யாக கால பூஜைகள் நடந்து வருகின்றன.
நாளை காலை 9ம் மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் குன்றக்குடிஅடிகளார், திருப்பானந்தாள் சுவாமிகள், தர்மபுரம் ஆதீனம், திருவாடுதுறை ஆதீனம் உள்ளிட்டமுக்கியஸ்தர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் பங்கேற்க தமிழகம் தவிர மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா உள்பட பல நாடுகளில்இருந்தும் ஏராளமான பக்தர்கள் பிள்ளையார்பட்டிக்கு வரவுள்ளனர்.
இன்று இரவு 7 மணிக்கு சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமும், இரவு 10 மணிக்குகோவிலின் ஆஸ்தான வித்வானான கத்ரி கோபால்நாத்தின் சாக்ஸபோன் இசை நிகழ்ச்சி நடக்கிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி பிள்ளையார்பட்டி ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
பிள்ளையார்பட்டி விநாயகர், வாழ்க்கையில் தடைகளைப் போக்கி, கேட்ட வரம் தருபவர் என்பதுபக்தர்களின் நம்பிக்கை.












Click it and Unblock the Notifications