பத்ரிநாத்தில் திடீர் வெள்ளம்: 17 பேர் பலி
டெராடூன்:
உத்தராஞ்சல் மாநிலத்தில் பத்ரிநாத் ஆலயத்துக்கு யாத்திரையாகச் சென்று கொண்டிருந்தயாத்ரீகர்களின் 3 வாகனங்கள் திடீர் மழை வெள்ளத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இதில்17 பேர் பலியாயினர். 28 பேர் காயமடைந்தனர்.
மொத்தம் 31 பேர் வரை பலியாகியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பிரசித்தி பெற்ற அமர்நாத் யாத்திரையைப் போல பத்ரிநாத் யாத்திரையும் ஆண்டுதோறும்நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இந் நியிைல் இன்றுமலைப் பாதையில் வாகனங்கள் யத்திரையாக சென்றபோது திடீரென கன மழை பெய்தது.
வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டு, நிலச் சரிவு உண்டானது. இதில் ஒரு பஸ், ஒரு லாரி, ஒரு குவாலிஸ்கார் ஆகியவை ஆலகண்டா ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டன. இதில் 17 பேர்இருந்ததாகவும் அனைவரும் பலியாகிவிட்டதாகவும் தெரிகிறது.
ஆனால், அதில் 31 பேர் இருந்ததாக விபத்தை நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர்.
இச் சம்பவத்தையடுத்து யாத்திரையை உத்தராஞ்சல் மாநில அரசு 20 நாட்களுக்கு நிறுத்திவைத்துள்ளது. திடீர் வெள்ளத்தால் 200 நெடுஞ்சாலை மீட்டர் சாலை அடித்துச்செல்லப்பட்டுவிட்டது.
இதனால் சுமார் 5,000 பக்தர்கள் பத்ரிநாத் ஆலயத்தின் அருகே சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்கள்திரும்ப முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.
இதுவரை குவாலிஸ் மற்றும் லாரி ஆகியவை மட்டுமே ஆற்றில் எஙகு கிடக்கின்றன என்பதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஸ் எங்கே மூழ்கியிருக்கிறது என்று தெரியவில்லை.
பத்ரிநாத்துக்கு வரும் பக்தர்களை திரும்பிச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளனர். அதேநேரத்தில் கேதார்நாத். ஹெம்குந்த் சாகிப் ஆகிய ஆலயங்களுக்கான யாத்திரைகள் தொடர்ந்துநடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications