தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்: கருணாநிதி
சென்னை:
நிதியமைச்சர் ப.சிதம்பரம் நன்றாக சிந்தித்து, மிகச் சிறப்பான பட்ஜெட்டை அறிக்கையை தாக்கல்செய்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பாலானவிஷயங்களை நிதி நிலை அறிக்கையில் உள்ளடக்கியுள்ளார் சிதம்பரம்.
மக்களவைத் தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் நாங்கள் உறுதியளித்தபடி கைத்தறி மற்றும்விசைத் தறிகள் மீதான சென்வாட் வரி இந்த பட்ஜெட்டில் நீக்கப்பட்டுள்ளது.
சென்னை நகருக்கு குடிநீர் வழங்க கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வருமான வரி உச்ச வரம்பு ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சேது சமுத்திரத் திட்டப் பணிக்கான ஆராய்ச்சியும் தொடங்கப்படும் என சிதம்பரம்உறுதியளித்துள்ளார்.
மக்களுக்கு நாங்கள் தந்த உறுதிமொழிகளை நிறைவேற்றும் வகையில் அமைந்திட்ட இந்தபட்ஜெட்டை சமர்பித்த சிதம்பரத்துக்கு எனது பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications