ஆசிய கோப்பை: 2 தமிழக வீரர்கள் நீக்கம்
சென்னை:
இலங்கையில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கச் செல்லும் அணியில் தமிழகவீரர்களாக முரளி கார்த்திக் மற்றும் ஹேமங் பதானி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 16ம் தேதி கொழும்பில் தொடங்குகிறது. இதற்கான இந்தியகிரிக்கெட் அணியின் 2 வார கால பயிற்சி முகாம் சென்னையில் நடந்தது. 20 பேர் கொண்ட உத்தேச அணிபயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
நேற்றுடன் பயிற்சி முடிவடைந்த நிலையில் 14 பேர் கொண்ட இறுதி அணி அறிவிக்கப்பட்டது. அதில் முரளிகார்த்திக், ஹேமங் பதானி ஆகியோர் இடம் பெறவில்லை. அதே போல ரோகன், ரமேஷ் பவார், அகார்கர்,பண்டாரியும் நீக்கப்பட்டனர்.
சில காலம் விளையாடாமல் இருந்த விக்கெட் கீப்பர் பார்த்தீவ் படேல், ஹர்பஜன், ஜகீர் கான் ஆகியோர் மீண்டும்சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் கங்குலி,
இலங்கை ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி திருப்தி தரும் விதமாக உள்ளது. அதில், மிகச் சிறப்பாகவிளையாடி கோப்பையை வெல்வோம்.
ஹர்பஜன் சிங் அணியில் இடம் பெற்றிருப்பது கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளது. பேட்டிங்குக்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:
சவுரவ் கங்குலி- கேப்டன்
ராகுல் திராவிட்- துணை கேப்டன்
டெண்டுல்கர்
யுவராஜ் சிங்
வீரேந்திர ஷேவாக்
விவிஎஸ் லட்சுமண்
முகம்மத் கைப்
அனில் கும்ப்ளே
பார்த்தீவ் படேல்
ஹர்பஜன் சிங்
ஆஷ்ஷ் நெஹ்ரா
ஜகீர் கான்
பாலாஜி
இர்பான் பதான்
இந்த அணி 13ம் தேதி கொழும்பு செல்கிறது.












Click it and Unblock the Notifications