திருக்குறளுக்கு தடை விதித்த மத்திய அரசு !
டெல்லி:
தொன்மை வாய்ந்த திருக்குறள் நூலின் ஆங்கிலப் பிரதியை அச்சிடுவதற்கு மத்திய அரசு திடீர் என்று தடைவிதித்துள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சி போய் தற்போது காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பதவியில் உள்ளது. பாஜக ஆட்சிக் காலத்தில்இந்துத்துவாவை முன்னிருத்தி, தேசிய கல்வி மற்றும் ஆய்வு மையத்தின் சார்பில் பல்வேறு நூல்களை அச்சிடும்பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந் நிலையில், காங்கிரஸ் ஆட்சி வந்தவுடன் மத்திய மனித வள அமைச்சகம், தேசிய கல்வி மற்றும் ஆய்வுமையத்தின் பணிகளை முழுமையாக மறுபரிசீலனை செய்து, சில புத்தகங்கள் அச்சிடுவதை நிறுத்தி வைக்கஉத்தரவிட்டுள்ளது. அதில் ஒன்றுதான் திருக்குறள்.
2000ம் ஆண்டுகளுக்கு முந்தைய திருக்குறளை மதங்களைக் கடந்த உலகப் பொதுமறையாக உலகம் முமுழுவதும்ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், மதம் சார்ந்த வாசகங்கள் இந்த நூலில் இருப்பதாக மத்திய மனித வளஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் நூலை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே அச்சிடுமாறு தேசிய கல்வி மற்றும் ஆய்வு மையத்திற்குமனித வள அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருக்குறள் குறித்து துளியும் தெரியாத சில வட இந்திய அதிகாரிகளே இந்த உத்தரவுக்குக் காரணமாக இருக்கவேண்டும் என்று தெரிகிறது.
மத்திய மனித வள அமைச்சகத்தின் இந்த உத்தரவு இலக்கிய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருக்குறளை, மத நூலாக கருதும் அளவுக்கு அந்த அதிகாரிகளின் அறிவுத் திறன் உள்ளது.
திருக்குறள் தவிர, பிரபல காங்கிரஸ் தலைவரான கரண்சிங் எழுதிய நூல் ஒன்றையும் அச்சிடுவதற்கு மனித வளஅமைச்சகம் தடை விதித்துள்ளது.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை?












Click it and Unblock the Notifications