சேது சமுத்திர திட்டத்துக்கு நிதி திரட்ட தனி வாரியம்
மதுரை:
சேதுசமுத்திரம் திட்டத்துக்காக நிதி திரட்ட தனி வாரியம் உருவாக்கப்படும் என மத்திய கப்பல்மற்றும் தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்த அமைப்பை உருவாக்குவது குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்குமத்திய அரசும் நிதி ஒதுக்கும். இது தவிர தனியார், பொதுத்துறை நிறுவனங்கள், அமைப்புகளிடம்இருந்தும் நிதி திரட்டப்படும்.
இத் திட்டத்திற்கு நிதியுதவி செய்யும், இதில் பங்கேற்கவும் ஏற்கனவே பல தனியார் நிறுவனங்கள்ஆர்வம் காட்டியுள்ளன.
முதலில் இத் திட்டத்துக்கான தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக்கூறுகள் தொடர்பான அறிக்கைபெறப்படும். அடுத்ததாக பொதுத்துறை முதலீட்டு வாரியத்தின் அனுமதி பெறப்படும்.
பின்னர் திட்டம் குறித்த முழு அறிக்கை மத்திய அமைச்சரவையின் முன் வைக்கப்பட்டு இறுதிஅனுமதி வாங்கப்படும். அதன் பின் சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தொடங்கும்.
இந்த வேலைகளை முடிந்த அளவுக்கு விரைவுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.
முன்னதாக கோதண்டராமர் கோவில் வழியாக சேது சமுத்திரக் கால்வாய் அமைப்பதாகதிட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடலின் சுற்றுச்சூழலைக் காக்கும் வரையில் ஆடம்ஸ் பிரிட்ஜ்வழியாக இந்தக் கால்வாய் தோண்டப்படும்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்க மத்திய அரசு தயாராகஉள்ளது. ஆனால், இதற்கு தமிழக அரசின் அனுமதி தேவை. மத்தியில் 12 பேர் தமிழகத்தில் இருந்துஅமைச்சர்களாக இருக்கிறோம்.
எங்களைப் பயன்படுத்தி தமிழகத்துக்கு முடிந்த அளவுக்கு திட்டங்களைக் கொண்டு வர வேண்டியகடமை முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்டு. இது தூத்துக்குடி- கொழும்பு கப்பல் போக்குவரத்துக்கும்பொருந்தும்.
கொச்சியில் இருந்து கொழும்புக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க அனுமதி கோரி வருகிறார்கேரள முதல்வர் ஆண்டனி. அவரது கோரிக்கையை நிராகரிக்க முடியாத நிலையில் இருக்கிறேன்என்றார்.
(இலங்கைக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையே பாக் ஜலசந்தி பகுதியில் பெரிய கப்பல்கள் செல்லும்அளவுக்கு கடலின் ஆழம் இல்லை. இதனால் வங்கக் கடல்- அரபிக் கடலுக்கு இடையில் பயணிக்கும்கப்பல்கள் இலங்கையை சுற்றிக் கொண்டு சென்று வருகின்றன.
சேது சமுத்திரத் திட்டப்படி கடலின் ஆழம் அதிகரிக்கப்படும். கடலிலேயே கால்வாய்வெட்டப்படும். இதனால் சர்வதேச கப்பல்கள் தமிழக துறைமுகங்கள் வழியாக வந்து செல்லும்.இதனால் கப்பல் சார்ந்த தொழில்கள் தென் தமிழகத்தில் பெருகும். இது தமிழகத்தின் கனவுத்திட்டமாக இருந்து வருகிறது.)
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications