முத்திரைத்தாள் மோசடியில் கருவூல அதிகாரிகள் !
சென்னை:
போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் தமிழக அரசு கருவூல (treasury) அதிகாரிகளுக்குத் தொடர்பிருப்பதாகசந்தேகிக்கப்படுகிறது.
இந்த வழக்கில் டிஐஜி முகமதுஅலி, டி.எஸ். பி. சங்கர், எல்.ஐ.சி.அதிகாரி ராமசாமி சாமி ஆகியோரை அடுத்துசிவகாசி அச்சக அதிபர் மகபூப் ஜான் கைது செய்யப்பட்டார். அவரை கர்நாடக மாநிலம் பெல்லாரியில் வைத்துசி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இப்போது இந்த வழக்கில் தமிழக அரசின் கருவூலத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற தகவல்கிடைத்துள்ளது. முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் அரசாங்க கருவூலங்களில் முத்திரைத்தாள் வாங்குவதுவழக்கம்.
ஆனால் கருவூலக அதிகாரிகள் சிலர் கருவூலங்களில் முத்திரைத் தாள்களுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தி(இங்கு இருப்பு இல்லை என்று சொல்லி), வெளியில் சிலரது பெயரை சொல்லி அவர்களிடம் வாங்கிக் கொள்ளச்சொன்னதாக தற்போது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகளைத் தொடர்ந்து கருவூலத்துறை அதிகாரிகளுக்கும் சிபிஐ வலைவிரித்துள்ளது.
இதற்கிடையே சிவகாசியில் உள்ள அச்சகங்களில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த வியாபார பரிவர்த்தனைகள்குறித்து தகவல் சேகரிக்குமாறு அந் நகர போலீசாருக்கு உத்தரவிட்டிருப்பதாக விருதுநகர் மாவட்ட எஸ்.பி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் விசாரணை:
இந் நிலையில், இந்த மோசடி வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ரோஷன் பேக்கிடம் சி.பி.ஐ. மீண்டும்விசாரணை நடத்தியுள்ளது.
முன்னாள் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ரோஷன் பேக். முத்திரைத்தாள்மோசடி விவகாரத்தில் குற்றச்சாட்டு எழுந்ததால் பதவி விலகினார். அவரது தம்பி ரேகன் பேக் இந்த வழக்கில்ஏற்கனவே கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications