3 நாடுகள் கிரிக்கெட்: நியூசிலாந்து சாம்பியன்
லண்டன்:
நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியைத்தோற்கடித்தது.
இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்தது. லீக் ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் மற்றஅணியுடன் 3 முறை மோதின. இதன் முடிவில் நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன.
இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதலில் மட்டை பிடித்த நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் 266ரன் எடுத்தது. அணித் தலைவர் பிளமிங் 67 ரன்களும், நாதன் ஆஸ்ட்லே 57 ரன்களும், மேக்மிலன் 52 ரன்களும்எடுத்தனர்.
பின்னர் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 41.2 ஓவர்களில் 159 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும்இழந்தது. அந்த அணியில் சுமித் அதிகப் பட்சமாக 44 ரன் எடுத்தார்.
இதனால் நியூசிலாந்து அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
நியூசிலாந்து தரப்பில் வெட்டோரி சிறப்பாக பந்து வீசி 30 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.












Click it and Unblock the Notifications