கோட்டை நோக்கி பேரணி; சாலை பணியாளர்கள் முடிவு
திருவாரூர்:
பணி நீக்கம் செய்யப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்களையும் மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி சென்னையில்வருகிற 27ம் தேதி கோட்டை நோக்கி பேரணி நடத்த சாலைப் பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
திமுக ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்கள் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு டிஸ்மிஸ்செய்யப்பட்டனர். இதையடுத்து தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி 10,000 பேரும் பல்வேறு விதமானபோராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் அடுத்த கட்ட போராட்டமாக சென்னையில் உள்ள தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்தசாலைப் பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக திருவாரூரில் நடந்த சாலைப் பணியாளர்கள்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் பணி நீக்கம் செய்யப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்களும் தங்களது குடும்பத்துடன்கோட்டை நோக்கிய பேரணியில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications