சென்னை குடிநீர் திட்டம்: ஜெவுக்கு சிதம்பரம் பதில்
சென்னை:
சென்னையின் குடிநீர் பஞ்சத்தைப் போக்க மத்திய அரசு அறிவித்துள்ள ரூ. 1,000 கோடி மதிப்பிலான கடல் நீரைகுடிநீராக்கும் திட்டம் மாநில அரசின் மூலமாகவே நிறைவேற்றப்படும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்விளக்கம் தந்துள்ளார்.
சிதம்பரம் சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், சென்னையில் ரூ. 1,000 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
இத் திட்டத்தை மத்திய அரசே நேரடியாக செயல்படுத்த முயல்வதாகவும், மாநில அரசின் உரிமையில் மத்திய அரசுதலையிடுவதாகவும் முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதற்கு ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
மாநில அரசு மூலமாகத்தான் இத் திட்டம் அமலாக்கப்படும் என்பதை பட்ஜெட்டிலேயே மிகத் தெளிவாகக்கூறியிருந்தேன். மாநில அரசின் உரிமையில் தலையிடும் எண்ணமே மத்திய அரசுக்கு இல்லை.
இதேபோன்ற திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தினாலும் அதை மத்திய அரசு தடுக்கப் போவதில்லை. மத்தியஅரசு ஒரு முயற்சியைத் தொடங்குகிறது, அதை மாநில அரசு தான் முடித்து வைக்க வேண்டும் என்று நாங்கள்விரும்புகிறோம்.
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கான ரூ. 1,000 கோடி நிதியை கடனாக வழங்குவதா அல்லது மானியமாகதருவதா என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications