மாறுவேடத்தில் சிபிஐ; அச்சத்தில் அச்சக அதிபர்கள்
சிவகாசி:
போலி முத்திரைத் தாள் மோசடியில் சிக்கியுள்ள 2 அச்சக அதிபர்களைக் கைது செய்ய சிபிஐ அதிகாரிகள்மாறுவேடத்தில் சிவகாசியில் முகாமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியால், சிவகாசி அச்சகஅதிபர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
போலிமுத்திரைத் தாள் மோசடியில் சிவகாசியைச் சேர்ந்த முன்னாள் அச்சக அதிபர் மெகபூப் ஜான் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் சிவகாசியைச் சேர்ந்த சர்தார் மற்றும் பிலால் ஆகியஅச்சக அதிபர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து இவர்கள் இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.இருவரும் தற்போது தலைமறைவாகி உள்ளதால் அவர்களைப் பிடிக்க மாறுவேடத்தில் சிபிஐ அதிகாரிகள்சிவகாசியில் முகாமிட்டுள்ளனர்.
இவர்கள் இருவர் தவிர மேலும் சில அச்சக அதிபர்களையும் அவர்கள் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.இதன் காரணமாக சிவகாசியில் உள்ள அச்சக அதிபர்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது. யார் யார் பிடிபடப்போகிறார்களோ என்ற பரபரப்பும் சிவகாசியில் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications