சுப. இளவரசனின் கூட்டாளி வீட்டில் வெடிகுண்டுகள்
சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் கேம்ப் பகுதியில் தமிழர் விடுதலைப் படை தலைவர் சுப. இளவரசனின்கூட்டாளிகளின் வீட்டிலிருந்து பைப் வெடிகுண்டுகளை கைப்பற்றியதாக போலீஸார் கூறுகின்றனர்.
இளவரசன் விஷயத்தில் போலீசாரின் செயல்கள் கண்ணாமூச்சித்தனமாக உள்ளன. அவரை காட்டுப்பகுதியில் வீரப்பனை சந்திக்கப் போகும்போது பிடித்தாக போலீசார் கூறினாலும், அவராகவே பலமாதங்களுக்கு முன்பே சரணைந்துவிட்டதாக தகவல்கள் வந்தன.
பொடாவில் கைது செய்யப்பட்ட அவர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில், மேட்டூர் கேம்ப் பகுதியில் ஒரு வீட்டில் குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகதகவல் வந்ததையடுத்து போலீஸார் அங்கு சென்றனர்.
ஆனால், வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிமன்றத்தை அணுகிய போலீஸார் பூட்டைஉடைத்து சோதனை நடத்த அனுமதி பெற்று உள்ளே சென்று சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் 5 பைப் வெடிகுண்டுகள் இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
இந்த வெடிகுண்டுகளும், சமீபத்தில் சுப. இளவரசன் கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்துகைப்பற்றப்பட்ட பைப் வெடிகுண்டுகளும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் போலீசார்கூறுகின்றனர்.
இந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் இளவரசனின் கூட்டாளியாக இருக்கலாம் என சந்தேகப்படுவதாகபோலீஸார் கூறியுள்ளனர்.
வீரப்பன் பதுங்கியுள்ள காட்டுப் பகுதிக்கு அருகே பூட்டிய வீட்டில் வெடிகுண்டுகள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications