இளம் பெண்ணை சூறையாடிய கணவன்- சாமியார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இளம் பெண்ணை செக்ஸ் வெறி பிடித்த அவரது கணவனும் போலிச் சாமியார் ஒருவனும் சேர்ந்துமானபங்கப்படுத்தியுள்ளனர். கணவனுக்கும் போலிச் சாமியாருக்கும் இடையே ஹோமோ செக்ஸ்உறவும் இருந்து வந்துள்ளது.

சென்னை சின்மயா நகரைச் சேர்ந்த தொழிலதிபரின் 17 வயது மகள் (பெயர், விவரம்தவிர்க்கப்பட்டுள்ளது) கல்லூரியில் படித்து வருகிறார். இவர்களது உறவினரான சிவக்குமார்என்பவர் வீட்டிலேயே தங்கி இருந்துள்ளார்.

இந் நிலையில் தொழிலதிபரின் மனைவிக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட, அவர்கள்குளித்தலையில் உள்ள சாமியார் சுரேஷ்வர் என்பவரை அனுகியுள்ளனர். அவர் பெளர்ணமிதோறும்பூஜை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து தொழிலதிபரின் வீட்டுக்கு சாமியார் சுரேஷ்வர் அடிக்கடி வந்து செல்லஆரம்பித்தார். அப்போது சுரேசுக்கும், சாமியார் சுரேஷ்வருக்கும் இடையே ஹேமோ செக்ஸ் பழக்கம்ஏற்பட்டுள்ளது.

இருவரும் சேர்ந்து தொழிலதிபரின் மகளையும் அனுபவிக்கவும் அவரது சொத்துக்களை சுருட்டவும்திட்டம் போட்டுள்ளனர். அதன்படி, சுரேசுக்கே உங்கள் மகளை திருமணம் செய்து வைக்கவேண்டும், அப்போது தான் தோஷங்கள் விலகும் என்று சாமியார் கூற, அதை நம்பி சுரேசுக்குதிருமணம் செய்து வைத்தார் தொழிலதிபர்.

இந்தத் திருமணத்தின்போது அந்தப் பெண்ணில் கழுத்தில் சுரேஷ் தாலி கட்ட, சாமியார் சுரேஷ்வரும்ஒரு முடிச்சைப் போட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலதிபரும் அவரது மனைவியும் இது குறித்துக் கேட்க, சிலமந்திரங்கள் சொல்லி முடிச்சு போட்டதாகவும், இதனால் அவர்களது வாழ்க்கை சிறப்பாக அமையும்என்று கூறியுள்ளார்.

திருமணம் முடிந்த சுரேசும் புது மனைவியும் ஹனிமூனுக்காக அந்தமான் செல்ல, கூடவேசுரேஷ்வரும் சென்றுள்ளார். இருவருக்கும் தோஷக் கழிப்பு பூஜை இருப்பதால் உடன் செல்வதாகசுரேஷ்வர் சொல்ல, அவரை தொழிலதிபர் உடன் அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், அந்தமானில் வைத்து சுரேசும், சாமியார் சுரேஷ்வரும் சேர்ந்து ஒரே நேரத்தில் அந்தப்பெண்ணுடன் பலவந்தமாக உடலுறவு வைத்து, செக்ஸ் வக்கிரங்களை நடத்தியுள்ளனர்.

கணவர் என்ற பெயரில் சுரேசும், நானும் தானே தாலியில் ஒரு முடிச்சு போட்டேன் என்று சொல்லிசாமியாரும் ஒரே நேரத்தில் கற்பழித்துள்ளனர்.

செக்ஸ் பிசாசுகளான அந்த போலிச் சாமியாரும், சுரேசும் அந்தப் பெண்ணின் கண் எதிரிலேயேஹோமோ செக்சிலும் ஈடுபட்டுள்ளனர்.

அந்தமானில் இருந்து கப்பலில் திரும்பியபோது, கப்பலில் வைத்தும் தொடர்ந்து இருவரும் அந்தப்பெண்ணை செக்ஸ் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

இதை பெற்றோரிடம் சொன்னால், அவர்களைக் கொலை செய்வோம் என்றும் இருவரும் மிரட்ட,ஊருக்குத் திரும்பி வந்த சில நாட்கள் நடந்ததை மறைத்துள்ளார் அந்த இளம் பெண்.

ஆனால், ஒரு வழியாய் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, பெற்றோரிடம் விஷயத்தை அவர்கூற, அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே போலீசில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து சுரேசும், சுரேஷ்வரும் கைது செய்யப்பட்டாலும், ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்.

இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி விமலா முன் நடக்கிறது. நேற்று இளம் பெண்நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

அந்தப் பெண்ணின் அடையாளம் வெளியில் தெரிவதைத் தவிர்க்கவும், அந்தப் பெண்ணின்எதிர்காலம் கருதியும், ரகசிய வாக்குமூலம் அளிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

இதையடுத்து சுமார் 2 மணி நேரம் அந்தப் பெண் நீதிபதியிடம் வாக்குமூலம் தந்தார். அப்போதுநீதிமன்றத்தில் நீதிபதி, இரு தரப்பு வழக்கறிஞர்கள், நீதிபதியின் உதவியாளர் தவிர வேறுஅனைவரும் வெளியேற்றப்பட்டு கதவுகள் மூடப்பட்டன.

இந்த சாட்சியத்தையடுத்து விசாரணையை நாளைக்கு (15ம் தேதி) நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+