வெளிநாட்டு சிறைகளில் 6,944 இந்தியர்கள் !
டெல்லி:
6,944 இந்தியர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் சிறைவாசத்தை அனுபவித்து வருவதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது.
வெளியுறவுத்துறை இணையமைச்சர் அகமத் இதனை இனறு மக்களவையில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
செளதி அரேபியாவில் தான் அதிகபட்சமாக 1,182 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.அடுத்தபடியாக பாகிஸ்தானில் 1,160 பேரும், வங்கதேசத்தில் 738 பேரும், ஐக்கிய அரபு நாடுகளில்597 பேரும், மலேசியாவில் 568 பேரும், சிங்கப்பூரில் 345 பேரும்,
இங்கிலாந்தில் 233 பேரும், உக்ரைனில் 231 பேரும், கிரீசில் 198 பேரும், பிரான்சில் 190 பேரும்,இஸ்ரேலில் 170 பேரும், லெபனானில் 160 இந்தியர்களும்,
நெதர்லாந்தில் 152 பேரும், பஹ்ரைனில் 163 பேரும், குவைத்தில் 134 பேரும், ரஷ்யாவில் 120பேரும், அமெரிக்காவில் 101 பேரும், சைப்ரசில் 49 பேரும் பல்வேறு வழக்குகள் தொடர்பாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இவர்களுக்கு அந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலமாக அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
வழக்குகளில் அவர்கள் சிக்க வைக்கப்பட்டிருந்தால் அவர்களை விடுவிக்கவும், அவர்களை தூதரகஊழியர்கள் சென்று சந்திக்கவும், உரிய நீதி கிடைக்கச் செய்யவும், விசாரணையைதுரிதப்படுத்தவும், சிறையில் அவர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படவும் உரியநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இராக்கில் இப்போது 5,052 இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றார் அகமத்.












Click it and Unblock the Notifications