பொடாவை நீக்க தமிழக பா.ஜ.க. கடும் எதிர்ப்பு
நாகர்கோவில்:
தீவிரவாதிகளை ஒடுக்கக் கொண்டு வரப்பட்ட பொடா சட்டத்தை ஒழிக்க கூடாது என்று தமிழகபாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் திக்கனங்கோடு என்ற இடத்தில் பாஜக பொதுக் கூட்டத்தில் அவர்பேசுகையில், தீவிரவாதத்தின் அரக்கத்தனத்தை ஒடுக்கவே பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது.இந்த சட்டத்த நீக்க காங்கிரஸ் அரசு முயன்றால் அது பேரழிவை ஏற்படுத்தி விடும்.
ஜனநாயகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது சாதாரணமானதுதான். இதனால் பாஜகவுக்கு லேசானபின்னடைவே ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திலும், ஆந்திராவிலும் பாஜக கூட்டணிக்கு வெற்றி கிடைத்திருந்தால், மத்தியில் பாஜகதலைமையிலான கூட்டணி ஆட்சி மீண்டும் ஏற்பட்டிருக்கும்.
விவசாயிகள் மீது திமுகவுக்கு அக்கறை இல்லை. அப்படி இருந்திருந்தால் விவசாய இலாகாவைசண்டை போட்டு பெற்றிருப்பார்கள், ஆனால் அவர்கள் சண்டை போட்டதோ வளம் தரும்இலாகாக்களுக்குத்தான் என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications