முகம்மது அலியின் காவல் மேலும் 15 நாள் நீட்டிப்பு
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைதாகியுள்ள டிஐஜி முகம்மது அலி உள்ளிட்ட3 பேரின் சிறைக் காவலும் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கடந்த 2ம் தேதி அலி உள்ளிட்ட 3 பேரும்கைது செய்யப்பட்டனர். அவர்களது காவல் இன்றுடன் முடிவடைவதால் அவர்கள் 3பேரும் எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது அலி சார்பில் புதிய ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவுக்குபதில் அளிக்க ஒரு வார கால அவகாசம் தேவை என்று சிபிஐ வழக்கறிஞர் கோரிக்கைவிடுத்தார்.
இதை ஏற்ற நீதிபதி அருள் ராஜ் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 21ம்தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் அலி உள்ளிட்டோரின் சிறைக் காவலை வருகிற 30ம்தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 3 பேரும் மீண்டும்சென்னை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications