ஜூலை 25ல் பெங்களூரில் தமிழர் பேரமைப்பு மாநாடு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

பெங்களூரில் வரும் 25ம் தேதி உலகத் தமிழர் பேரவை அமைப்பின் 2ம் ஆண்டு நிறைவு விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, உலகத் தமிழர் பேரவை அமைப்பின் தலைவர்பழ.நெடுமாறன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

வரும் 25ம் தேதி காலை 9 மணிக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் சுப்பிரமணியனின் வரவேற்புரையுடன் விழாதொடங்குகிறது. காசி ஆனந்தன் கொடியேற்றி வைக்கிறார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன்மாநாட்டில் துவக்க உரை நிகழ்த்துகிறார். பழ. நெடுமாறன் தலைமை உரை நிகழ்த்துகிறார்.

தமிழா நாம் பேசுவது தமிழா என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறுகிறது. கவிஞர்கள்அறிவுமதி,மரு.அ.தாயப்பன், ஜெயபாஸ்கரன், பச்சியப்பன் ஆகியோர் கவி பாடுகிறார்கள். பின்னர், தமிழ் வளர்ச்சிஅன்றும் இன்றும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெறுகிறது. இதனையடுத்து பொருளாதாரத்தில் தமிழர்நிலை குறித்து கருத்தரங்கும், காசி ஆனந்தனுக்கு உலகப் பெருந்தமிழர் விருதும் வழங்கப்படுகிறது.

விழாவில் பழ.நெடுமாறனின் பழந்தமிழர் பரவிய நாடுகள் என்ற புத்தகம் உள்ளிட்ட நூல்கள்வெளியிடப்படுகின்றன. மாலையில் நடைபெறும் கருத்தரங்கில் வைகோ வாழ்த்துரை வழங்குகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+