பள்ளி, கல்லூரிகள் மூடல், கடைகள் அடைப்பு

Subscribe to Oneindia Tamil

The burnt bodies of childrensகும்பகோணம்:

கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீ விபத்தில் 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பரிதாபமாக இறந்தசம்பவம் நகரையே உலுக்கிவிட்டது. அங்கு பள்ளிகள், கல்லூரி மற்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

கும்பகோணம் நகர மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தங்களது குழந்தைகளுக்கு என்ன ஆயிற்றோ என்றபெரும் அதிர்ச்சியில் பெற்றோர்கள் கிருஷ்ணா பள்ளிக்கு ஓடினர்.

காலையில் யூனிபார்ம்களை அணிந்து, பட்டாம் பூச்சிகளாய் பள்ளிக்குப் போன அந்தப் பிஞ்சுகள் கரிக்கட்டைகளாய் மாறிக் கிடந்தது பார்ப்பவர் நெஞ்சை உறைய வைத்துவிட்டது.

எது தனது மகள், மகன் என்று தெரியாமல், கட்டைகளாய் கிடந்த பிள்ளைகளை அலறலுடன் போய், தேடித் தேடிப்பார்த்த பெற்றோரின் கதறல் அங்கிருந்த போலீசார், நிருபர்கள் என அனைவரையும் உலுக்கிப் போட்டுவிட்டது.

மகாமகம் சோகத்தைவிட அதிக சோகத்தில் கும்பகோணம் ஆழ்ந்து போயுள்ளது.

யாரைப் பார்த்தாலும் கண்ணீருடன் புலம்புவதைப் பார்க்க முடிகிறது. பரிதாபமாக இறந்து போன பள்ளிப்பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கும்பகோணம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கடைகள்அடைக்கப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+