ஊழலை எதிர்த்து 71 வயதில் சைக்கிள் பயணம் !
சென்னை:
உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்த நானிவால் என்ற 7 1 வயது முதியவர் ஊழலை ஒழிக்க வலியுறுத்தி இந்தியாமுழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
உத்தாரஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்தவர் நானிவால், 71 வயதாகும் இவர், நாடு முழுவதும் ஊழல் தலைவிரித்தாடுவதை எண்ணி கொதித்துப் போனார். ஊழலையும், லஞ்சத்தையும் ஒழிக்க வேண்டும், அதை ஆதரிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிளில் பயணித்து பிரசாரம் செய்ய முடிவு செய்தார்.
இதையடுத்து தனது வயதையும், உடல் நலத்தையும் பற்றி கவலைப்படாது சைக்கிள் பயணத்தைத் தொடங்கினார்.வியாழக்கிழமை அவர் சென்னை வந்து சேர்ந்தார். வழியெங்கும் ஒவ்வொரு மாநிலத்தையும் கடக்கும்போது அந்தமாநில அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் சந்தித்து லஞ்ச, ஊழலை ஒழிக்கும்படி கோரிக்கை விடுக்கநானிவால் தவறவில்லை.
12 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ள நானிவால் தனது சைக்கிள் பயணத்தை மும்பைவழியாக தொடர்ந்து உத்தாரஞ்சலில் முடிக்கிறார்.












Click it and Unblock the Notifications