பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை
சென்னை:
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக அங்கம் வகிக்கவில்லை என முதல்வர்ஜெயலலிதா கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
பா.ஜ.க. கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்கவில்லை. பாஜக கூப்பிட்டால் மட்டுமே தேசிய ஜனநாயகக்கூட்டணிக் கூட்டங்களில் அதிமுக எம்.பிக்கள் கலந்து கொள்கிறார்கள்.
தேர்தல் தோல்விகளை நான் பாடமாக மட்டுமே எடுத்துக் கொள்வேன். அதனால் மனம் உடைந்து போய் விடமாட்டேன். ஒவ்வொரு தோல்வியும் எனக்கு ஒரு பாடமாகும்.
தேர்தல் தோல்வி காரணமாகவே, சலுகைகளை அதிகமாக வழங்குவதாக அதிமுக அரசு மீது கூற முடியாது. மக்கள்விரும்பியதை நாங்கள் கொடுத்து வருகிறோம்.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அதிக அளவில் உள்ளனர். தேவைக்கு அதிகமாகவே உள்ளனர். இதுதவிர 15,000தற்காலிகப் பணியாளர்களும் கூடுதலாக உள்ளனர். அனுதாப அடிப்படையில் அவர்கள் பணியில் தொடர அரசுஅனுமதித்துள்ளது.
எனவே இப்போதைக்கு புதிய ஊழியர்களை தேர்வு செய்ய முடியாத நிலையில் அரசு உள்ளது என்றார்ஜெயலலிதா.
தமிழகத்தில் கும்பாபிஷேகங்கள் தள்ளிவைக்கப்பட்டது தொடர்பான பிரச்சினை முடிந்து விட்டது. அனைத்துக்கோவில்களுக்கும் கும்பாபிஷேக தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது முடிந்து போன விஷயம் என்றார்.












Click it and Unblock the Notifications