கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி, டிராவிட் சதம்
தமுல்லா:
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி116 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற கேப்டன் கங்குலி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாகஷேவாக்கும், டெண்டுல்கரும் களம் இறங்கினர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 ரன் எடுப்பதே எனது லட்சியம் என்று கூறியஷேவாக் துரதிருஷ்டவசமாக ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 1.
ஷேவாக்கின் அவுட்டை தொடர்ந்து கேப்டன் கங்குலி களமிறங்கினார். அணியின் ஸ்கோர் 30 ஆக உயர்ந்தநிலையில் அசிம் சயீத் வீசிய பந்தில் டெண்டுல்கர் கேட்ச் ஆகி அவுட்டானார். டெண்டுல்கர் 25 பந்துகளில் 18ரன்கள் எடுத்தார்.
2 முக்கிய விக்கெட்டுகளை இழந்ததைத் தொடர்ந்து ஆட வந்த லட்சுமண் மட்டை போடத் தொடங்கினார்.மறுமுனையில் கங்குலி மிகவும் தடுமாற்றத்துடன் ஆடினார். பலமுறை அவுட் ஆவதில் இருந்து தப்பினார்.
13 ஓவரின் முதல் பந்தில் அட்டகாசமான சிக்சர் ஒன்றை அடித்து லட்சுமண் தனது ரன் கணக்கைத் துவக்கினார்.ஆனால் அணியின் ஸ்கோர் 65-ஐ எட்டிய போது லட்சுமண் கேட்ச் அவுட் ஆனார்.












Click it and Unblock the Notifications