வரிசையாய் 17 பாடைகள்: நிலை குலைந்த கிராமம்
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீ விபத்தில் கும்பகோணம் அருகே உள்ள நத்தம் கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த17 மாணவ, மாணவியர் பலியானது அந்த கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தீ விபத்தில் பலியான 90 குழந்தைகளில் 17 பேர் நத்தம் கருப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
இறந்த 17 குழந்தைகளையும் பாடையில் கட்டி வரிசையாக தூக்கிச் சென்றதைப் பார்த்து ஒட்டு மொத்த கிராமமேகதறி அழுதது.
17 குழந்தைகளின் உடல்களும் ஒரே இடத்தில் வைத்து அடக்கம் செய்யப்பட்டன. அந்த ஊரில் சுடுகாடு கூடகிடையாது என்பதால், உள்ள ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.












Click it and Unblock the Notifications