தமிழக பாஜக எம்பி, எம்எல்ஏக்கள் நிவாரண உதவி
கும்பகோணம்:
கும்பகோணம் தீவிபத்தில் இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தமிழக பாஜக எம்.பி, எம்.எல்.ஏக்கள்ஆகியோர் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக அளிக்கவுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர்திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இன்று காலை கும்பகோணம் சென்ற அவர் தீவிபத்து நடந்த பள்ளிக் கூடத்தைப் பார்வையிட்டார். பின்னர்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை சந்தித்து அவர்களது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இதுபோன்ற சம்பவம் நாட்டில் இனி எங்குமே நடக்கக்கூடாது. பிஞ்சுக் குழந்தைகள் கருகி இறந்தது மிகவும் பரிதாபமானது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு பாஜக உதவி செய்யும். அதன்படி தமிழக பாஜகவின் ஒரேஎம்.பியான நான் எனது 2 மாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு தரவுள்ளேன். அதேபோல, தமிழக பாஜகஎம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிக்கவுள்ளனர்.
கீற்றுக் கொட்டகையில் நடத்தப்பட்டு வரும் பள்ளிக் கூட நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுதயங்கக் கூடாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications