For Daily Alerts
Just In
கிருஷ்ணா பள்ளி நிர்வாகிகள் திருச்சி சிறையில் அடைப்பு
கும்பகோணம்:
90 உயிர்களைக் குடித்த தீ விபத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி நிர்வாகிகள்உள்ளிட்ட 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தீவிபத்தைத் தொடர்ந்து தலைமறைவான கிருஷ்ணா பள்ளியின் தாளாளர் பழனிச்சாமி, அவரது மனைவி சரஸ்வதி,அவர்களது வளர்ப்பு மகளான சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சத்துணவு ஆயா வசந்திஆகிய 5 பேரும் தஞ்சாவூரில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.
அனைவரும் நேற்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரும் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுஅங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Comments
chennai astrology kumbakonam child jail news died fire accident prison kural art gallery florals tamilndau krishna school
Story first published: Sunday, July 18, 2004, 5:30 [IST]