Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூரைகளை அகற்ற பள்ளிகளுக்கு அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதும் உள்ள கூரைப் பள்ளிகளில், ஒரு வார காலத்திற்குள் கூரைகளை அகற்றி விட வேண்டும் என்றுதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி அகற்றப்படாத பள்ளிகள் செயல்பட அனுமதிக்கப்படாது என்றும் கல்விஅமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த அரசு உதவி பெறும் கிருஷ்ணா உயர்நிலைப் பள்ளி வளாகத்தில்ஏற்பட்ட கொடும் தீக்கு 90 அப்பாவிக் குழந்தைகள் பலியான சம்பவம் இன்னும் மக்கள் மனதை விட்டுமறையவில்லை.

இந் நிலையில் குடிசைகளில் இயங்கி வரும் பள்ளிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.தமிழகம் முழுவதும் இன்னும் ஒரு வாரத்திற்குள், கூரைகளை அகற்றி விட வேண்டும் என்று குடிசைகளில் இயங்கிவரும் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்தப் பள்ளிகளுக்கு ஒரு வார கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.அதற்குள் கூரைகளை அகற்றி விட வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். அதுவரைவகுப்புகளை தற்காலிகமாக ரத்து செய்யுமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூரையுடன் பள்ளிகள்இயங்க அனுமதிக்கப்படாது.

இதுதொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. கூரையின் கீழ் இயங்கும்பள்ளிகளை அடையாளம் கண்டு அவற்றை மாற்றுவதை கண்காணிக்குமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுஎன்றார் அவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+