மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றம்
கும்பகோணம்:
கிருஷ்ணா பள்ளி தீவிபத்திலிருந்து தப்பிய சுமார் 750 மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றும் நடவடிக்கைதொடங்கியுள்ளது.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீவிபத்தில் 90 குழந்தைகள் கருகிப் போயின. விபத்திலிருந்து தப்பியபிள்ளைகளை வேறு பள்ளிகளுக்கு மாற்ற முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் இன்று அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கினர். சுமார் 200பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியருடன் கல்வி அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப வேறு பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர்இன்று மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவுகளும் உடனடியாக மாணவர்களின் பெற்றோர்களுக்குவழங்கப்பட்டது.
இதற்கிடையே, கும்பகோணம்,தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட தஞ்சை மாவட்டத்தில் உள்ளதேவலாயங்களில் இன்று இறந்த குழந்தைகளுக்காக சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications