தப்பி ஓடிய 24 ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் தீவிபத்து நடந்தபோது பிள்ளைகளை தீக்கு இரையாக்கி விட்டு விட்டு தப்பிஓடிய 24 ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இதுவரை பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 5பேரை கைது செய்து அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்தபோது பள்ளிப் பிள்ளைகளை காப்பாற்ற முயற்சிக்காமல் தப்பி ஓடியதாக அப் பள்ளியைச் சேர்ந்த24 ஆசிரியர்கள் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்து வருகிறோம். தேவைப்பட்டால் அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications