அத்வானி, வெங்கையா நாளை கும்பகோணம் வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கும்பகோணம் தீவிபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறவும், தீக்காயமடைந்தகுழந்தைகளைப் பார்த்து நலம் விசாரிக்கவும் முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி, பாஜக தலைவர் வெங்கையாநாயுடு ஆகியோர் நாளை தமிழகம் வருகிறார்கள்.
கும்பகோணத்தில் தீவிபத்து நடந்த இடத்தையும், தீக்காயம் அடைந்த குழந்தைகளைப் பார்த்து ஆறுதல் கூறவும்பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கும்பகோணம் வந்த வண்ணம் உள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும்கும்பகோணம் சென்றனர். இந் நிலையில் பாஜக சார்பில் முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி, பாஜக தலைவர்வெங்கையா நாயுடு ஆகியோர் நாளை கும்பகோணம் வரவுள்ளதாக பாஜகவின் மாநிலத் தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications