For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

6 குழந்தைகளின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடம்

By Staff
Google Oneindia Tamil News

கும்பகோணம்:

கிருஷ்ணா பள்ளி தீ விபத்தில் காயமடைந்த மேலும் 3 குழந்தைகள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்தில் லேசான காயமடைந்த இந்த 3 பேரையும் அவர்களது பெற்றோர் வீட்டில் வைத்து சிகிச்சை அளித்துவந்தனர். ஆனால், உரிய சிகிச்சை அளிப்பதற்காக தற்போது கும்பகோணம் அரசு மருத்துவனையில்சேர்த்துள்ளனர்.

இவர்களில் ஒரு சிறுவனுக்கு இடது கால் எரிந்து போய் விட்டது. இவர்களையும் சேர்த்து தற்போது கும்பகோணம்மருத்துவமனையில் 11 பேர் உயிருக்கு ஆபத்தில்லாத நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள 4 சிறுமிகளின் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது.அவர்களுக்கு 40 சதவீதத்திற்கும் மேல் தீக் காயம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 குழந்தைகளின் நிலையும்கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X