Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூரைகளை அகற்ற ஜூலை 30 வரை ஜெ. கெடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள கூரைகளை ஜூலை 30ம் தேதிக்குள் பள்ளி நிர்வாகங்கள் அகற்றி விட வேண்டும். இல்லாவிட்டால்அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழகம் முழுவதிலும், கீற்றுக் கொட்டகைகளின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் வருகிற30ம் தேதிக்குள் கூரை அகற்றப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகங்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

கீற்றுக் கொட்டகைகள் அகற்றப்படும் வரை அவற்றின் கீழ் வகுப்புகள் நடத்தப்படக் கூடாது. 30ம் தேதிக்குள் கீற்றுக் கொட்டகைகளைஅகற்றி மாற்று ஏற்பாடுகள் செய்யாத பள்ளி நிர்வாகங்கள் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கீற்றுக் கொட்டகைகள் அகற்றப்பட்ட விவரத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகள் தங்களது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அறிக்கை மூலம்அளிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை தங்களது மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து கீற்றுக் கொட்டகையின் கீழ்இயங்கி வரும் பள்ளிகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கீற்றுக் கொட்டகைகள் அகற்றப்பட்டதாக அறிக்கை அளிக்கும் பள்ளிகளை, மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட தலைமை கல்வி அதிகாரி,தொடக்கக் கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த 2 பேர் அடங்கிய குழு நேரில் சென்று ஆய்வுசெய்து முற்றிலும் தீப்பிடிக்காத கூரைகள் போடப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

கும்பகோணத்தில் நேர்ந்த கொடூரத்தை உணர்ந்து பள்ளி நிர்வாகங்கள் இந்த நடவடிக்கையை துரிதப்படுத்தி, இளம் குழந்தைகளுக்கு சிறந்தஎதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க உதவ வேண்டும் என்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+