For Daily Alerts
Just In
நீதிமன்றத்துக்கு ஆயுதங்களுடன் வந்த கவுன்சிலர் கைது
மதுரை
மதுரை நீதிமன்றத்திற்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாநகராட்சியின் 31-வது வார்டு திமுக கவுன்சிலர் குருசாமி. இவர் மீது கொலை வழக்கு ஒன்று மதுரைநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக குருசாமி நீதிமன்றம் வந்திருந்தார்.
அப்போது அவரது காரை போலீஸார் சோதனையிட்டனர். காரில், பட்டாக்கத்திகள், இரும்புத் தடிகள் போன்றவைஇருந்தது அப்போது தெரியவந்தது. இதையடுத்து குருசாமி, அவருடன் வந்த உறவினர் முருகன் ஆகியோரைபோலீஸார் கைது செய்தனர்.
நீதிமன்றத்திற்கு பயங்கர ஆயுதங்களுடன் திமுக கவுன்சிலர் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Story first published: Tuesday, July 20, 2004, 5:30 [IST]