சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 5 நீதிபதிகள்
டெல்லி:
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விரைவில் 5 புதிய நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 49 நீதிபதி பதவிகள் உள்ளன. இதில் 20 நீதிபதி பணியிடங்கள் காலியாகஉள்ளன. இந் நிலையில் வருகிற 24ம் தேதி மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை திறக்கப்படவுள்ளது. இந்தநீதிமன்றத்திற்கு 5 நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
எனவே சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகள் தேவை என்று கூறி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றதலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து தமிழக அரசும், சென்னைஉயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக 5 நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்து மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியது.
இந்த பரிந்துரையின் பேரில் கூடுதலாக 5 நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மத்திய அரசுபரிந்துரை செய்யவுள்ளது. இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிந்துரையின் பேரில்,குடியரசுத்தலைவர் புதிய நீதிபதிகள் நியமனம் குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடைகோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு:
மதுரை உயர்நீதிமன்ற கிளைத் திறப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
சுப்பிரமணி என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையை மதுரையில் துவக்க வேண்டுமானால் அதற்கு மக்களவையில் ஒரு சட்டம்நிறைவேற்றியாக வேண்டும். ஆனால், குடியரசுத் தலைவர் உத்தரவு மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவேமதுரை உயர்நீதிமன்றக் கிளையை துவக்கும் அறிவிப்புக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று அந்த மனுவில்தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications