நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை கமிஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கும்பகோணம் தீவிபத்து தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சம்பத்தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் கமிஷனை முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கும்பகோணத்தில் நடந்த கொடூர தீவிபத்து குறித்துஉயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையிலான ஒரு நபர் கமிஷன் விசாரணை நடத்தும்.

தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள், யார் மீது தவறு என்பது உள்ளிட்டவற்றை இந்த விசாரணைக் கமிஷன்விசாரிக்கும். அதுதவிர எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்களைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பது குறித்தும் இந்த கமிஷன் பரிந்துரை செய்யும்.

விசாரணை நீதிபதிக்கு உதவியாக கல்வித்துறையில் அனுபவம் வாய்ந்த பெண் சமூக சேவகர், தீயணைப்புத் துறைநிபுணர், குழந்தைகள் மனவியலாளர் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழுவும் இருக்கும்.

நிபுணர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக கல்வித்துறைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால்வாரிய செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை கட்டடப் பிரிவு தலைமைப் பொறியாளர் ஆகியோர்உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.

4 மாதங்களுக்குள் இந்த விசாரணை முடிந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+