கருணாநிதி வீட்டு பந்தலை அகற்ற கோரிக்கை
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் சென்னை கோபாலபுரம் வீட்டு முன்பு போடப்பட்டுள்ள குடிசைப் பந்தலை அகற்றவேண்டும், இல்லாவிட்டால் பலரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அதிமுக மாநகராட்சிக் கவுன்சிலர்வெற்றிவேல், மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் விஜயக்குமாரிடம் வெற்றிவேல் கொடுத்துள்ள புகார் மனு:சென்னை மாநகராட்சி சட்டம் 258 மற்றும் 261 ஆகியவற்றின் கீழ் மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதி பெறாமல்குடிசைகள் போடுவது, பந்தல் அமைப்பது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டின் முன்பாக மிகப் பெரிய கூரைப் பந்தல்போடப்பட்டுள்ளது. இங்கு தீவிபத்து ஏற்பட்டால் பொதுமக்களுக்கு மிகப் பெரும் ஆபத்து ஏற்படும்.
இதேபோல, திமுகவின் மற்றொரு கிளை அலுவலகமான தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் வளாகத்திலும்மிகப் பெரிய பந்தல் போடப்பட்டுள்ளது. இங்கு தீவிபத்த ஏற்பட்டாலும் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும்.
முன்பு திமுகவைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது, முன்னாள் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடிராமமூர்த்தியின் வீட்டு முன்பு போடப்பட்டிருந்த பந்தலை வலுக்கட்டாயமாக அகற்ற உத்தரவிட்டார்.
எனவே, தற்போது கும்பகோணத்தில் நடந்துள்ள கோர விபத்தை கருத்தில் கொண்டு அதுபோன்ற விபத்துக்களைதவிர்க்கும் பொருட்டு கருணாநிதியின் வீடு மற்றும் அன்பகத்தின் முன்புள்ள குடிசைகளை அகற்ற நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications