13 ஆசிரியைகள் போலீஸில் சரண்

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

தீவிபத்து நடந்த கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியின் ஆசிரியைகள் 13 பேர் கும்பகோணம் கிழக்கு காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் போலீஸார் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்திய பின்விடுவித்தனர்.

கும்பகோணம் தீவிபத்தின்போது ஆசிரியைகள் அனைவரும் உயிர் தப்பி ஓடி விட்டதாக புகார் எழுந்தது.அதேபோல, இந்த தீவிபத்தில் எந்த ஆசிரியையும் இறக்கவில்லை.

இந் நிலையில் தலைமறைவாக இருந்த சில ஆசிரியைகள் தங்களது நிலையை விளக்கி பேட்டியளித்தனர். இந்தச்சூழ்நிலையில் கும்பகோணம் காவல் நிலையத்திற்கு 13 ஆசிரியைகள் திடீரென்று வந்தனர். தாங்கள் சரண்அடைவதாக போலீஸாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

பிற்பகல் 2 மணிக்கு அவர்கள் கிழக்கு காவல் நிலையத்திற்கு வந்து தங்களது நிலையை விளக்கி அறிக்கைஅளித்தனர். பின்னர் அவர்களிடம் கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர் கல்யாண சுந்தரம் விசாரணைநடத்தினார். சுமார் 8 மணி நேரம் அவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டனர். பின்னர் இரவு 11 மணி வாக்கில்அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

விசாரணைக்குப் பின்னர் வெளியே வந்த ஆசிரியைகள், முற்றுகையிட்டிருந்த செய்தியாளர்களையும்,புகைப்படக்காரர்களையும் தவிர்த்து விட்டு வேகமாக சென்று விட்டனர். சிலர் முகங்களை மூடிக் கொண்டுவெளியேறினர். போகும்போது, சில ஆசிரியைகள், மாலை 6 மணிக்கு மேல் தங்களை காவல் நிலையத்தில் வைத்துவிசாரணை செய்தது சட்டப்படி தவறானது என்று புகார் தெரிவித்தவாறு சென்றனர்.

இதுகுறித்து கூடுதல் டிஜிபி நடராஜ் கூறுகையில், மீண்டும் இவர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. இதற்காகமீண்டும் விசாரணைக்கு வருமாறு ஆசிரியைகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் தீவிபத்துநடந்தபோது குடிசையின் கீழ் வகுப்புகள் நடத்திக் கொண்டிருந்த 3 ஆசிரியைகளிடம் தீவிர விசாரணைநடத்தப்பட்டது.

மரியம் ஏஞ்சலின் என்ற ஆசிரியைதான் முதலில் விசாரிக்கப்பட்டார். அவர் மீதுதான் நிறைய புகார்கள்வந்துள்ளன. பின்னர் தேவி, மகாலட்சுமி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இருவருக்கும் தீக்காயம்ஏற்பட்டுள்ளது.

பின்னர், கீதா, சங்கரி, சாந்தி, ஜீவா, மணிமொழி, இந்திரா, ஆசிரியர் சிதம்பரம் ஆகியோரும் விசாரணைக்குவந்திருந்தனர். இவர்களில் சிதம்பரம் சம்பவம் நடந்தபோது, மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார்.

விசாரணையின்போது அனைத்து ஆசிரியர்களுமே, நாங்கள் தலைமறைவாக இருக்கவில்லை. பொதுமக்களால்தாங்கள் தாக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே வீட்டுக்குள்ளேயே இருந்தோம், போலீஸாரின்விசாரணைக்கு ஒத்துழைக்க நாங்கள் முழுமையாக தயாராக இருப்பதாக எங்களிடம் தெரிவித்தனர் என்றார்நடராஜ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+