மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு 123 ஊழியர்கள் !
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற ஊழியர்களில் 123 பேர் மதுரை கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.வியாழக்கிழமை அவர்கள் பணியில் சேர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை உலகனேரியில் வருகிற 24ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திறக்கப்படவுள்ளது.இதையடுத்து மதுரை கிளைக்குத் தேவையான ஊழியர்களை சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கு இடமாற்றம்செய்துள்ளது.
மதுரைக்கு செல்ல ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்த 123 ஊழியர்களையும் வியாழக்கிழமையன்று மதுரையில்பணியில் சேருமாறு உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஊழியர்கள் தேவைப்பட்டால் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும்அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications