மேட்டூர் அணையை திறக்க கருணாநிதி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மேட்டூர் அணையில் 70 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் பாசனப் பகுதி விவசாயிகளின் நலன் கருதிஅணையை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில், கடந்த காலங்களை விட மேட்டூர் அணையில் தற்போதுஅதிகமாகவே தண்ணீர் உள்ளது. தற்போது அணையில் 73 அடி நீர் உள்ளது. அணைக்கும் விநாடிக்கு 9,000 கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்களவைத் தேர்தலில் பெரு வெற்றி கிடைத்த நிலையில், மத்தியில் திமுகஅங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த நிலையில், திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகளின்வலியுறுத்தலின் பேரில், கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து தற்போது 73 அடி என்ற நிலையைஎட்டியுள்ளது. இந் நிலையில் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக மேட்டூர் அணைதிறக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

தஞ்சை விவசாயிகள் கைது:

இதற்கிடையே கர்நாடக மாநிலத்திலிருந்து காவிரி நீரைத் திறந்தவிடக் கோரி மத்திய அரசு அலுவலகங்கள் முன்புஇன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 350 பேரை போலீசார் கைது செய்தனர் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+