கிருஷ்ணா பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுக்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கும்பகோணம் கிருஷ்ணா தீவிபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வேறு வேறு பள்ளிகளில் சேர்ந்துள்ளமாணவ, மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்குமாறு தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்திற்குமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்திலிருந்து தப்பிய மாணவர்கள் குடந்தை நகரில் உள்ள வேறு வேறுபள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழ்நாட்டுப் பாடல் நூல் கழகம் சார்பில் இலவச புத்தகங்கள்வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் சார்பில் 10,000 நோட்டுப் புத்தகங்களை இலவசமாக வழங்கஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications