For Daily Alerts
Just In
கூரை பள்ளிகள் அகற்றம்: நெல்லை முதலிடம்
திருநெல்வேலி:
கும்பகோணம் கோர விபத்துக்குப் பின் திருநெல்வேலி மாவட்டத்தில் கூரை வேயப்பட்டிருந்த 79 பள்ளிகளிலும்கூரைகள் அகற்றப்பட்டு விட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அதுல் ஆனந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து அதுல் ஆனந்த் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 2,449 பள்ளிகள் உள்ளன. இவற்றில்79 பள்ளிகளில் கூரைகள் போடப்பட்டிருந்தன. அவை அனைத்தும் தற்போது அகற்றப்பட்டு விட்டன.
இதேபோல, சத்துணவுக் கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் கூரையின் கீழ் சமையல் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
கூரைகளை அகற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்குப் பிறகு நெல்லை மாவட்டத்தில்தான்முழுமையாக கூரைகள் அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Wednesday, July 21, 2004, 5:30 [IST]