For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமேஸ்வரத்தில் 3 இலங்கை தமிழர்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்:

இலங்கையிலிருந்து கள்ளப் படகு மூலம் தமிழகம் வந்த 3 இலங்கைத் தமிழர்களை போலீஸார் கைது செய்தனர்.

இலங்கையிலிருந்து சிலர் கள்ளப் படகுகள் மூலம் ராமேஸ்வரம் நோக்கி வருவதாக போலீஸாருக்குத் தகவல்கிடைத்தது. இதையடுத்து ஓலைக்குடா கடற்கரை பகுதியில் ராமேஸ்வரம் போலீஸார் முகாமிட்டு கண்காணித்துவந்தனர்.

அப்போது படகில் வந்து இறங்கிய 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள்யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மகேஷ்வரன், மஞ்சுளா, திருகோணமலையைச் சேர்ந்த சுபாஷினி என்பது தெரியவந்தது.

இவர்கள் 3 பேர் தவிர மேலும் 6 பேரும் படகில் வந்ததாகவும், அவர்கள் 6 பேரும் தப்பி விட்டதாகவும் பிடிபட்ட 3பேரும் தெரிவித்தனர். இவர்கள் இலங்கையில் சண்டை மூளும் அபாயம் ஏற்பட்டிருப்பதால் அங்கிருந்து தமிழகம்வந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X