22,187 ஆசிரியர்கள் நியமனம்: ஜெ. உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் காலியாக உள்ள 22,187 ஆசிரியர் பணியிடங்கள் இன்னும் 4 மாத காலத்திற்குள் நிரப்பப்பட்டு விடும்என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ளதாகவும் அரசுதெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி நிலவரப்படி22,187 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது ஜெயலலிதாவின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, 12,900 இடைநிலை, உடல் கல்வி, ஓவியம், இசை ஆகிய ஆசிரியர் பணியிடங்கள் அடுத்தமாதத்திற்குள் நிரப்பப்படும்.

8,634 பி.எட், மேல் நிலை ஆசிரியர் பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் 4 மாதத்திற்குள் நிரப்பப்படும். 1,283பி.எட், மேல் நிலை ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும். இதன் மூலம் டிசம்பர் 1ம்தேதியன்று தமிழகத்தில் எந்த ஆசிரியர் பணியிடமும் காலியாக இருக்காது என்று அரசின் செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+