உத்திரப்பிரதேசம் ரூ.41 லட்சம் நிவாரணம்
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம் :
கும்பகோணம் தீ விபத்தில் உயிர் இழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு உத்திரப் பிரதேச அரசு சார்பிலும்,சமாஜ்வாடி கட்சி சார்பிலும் ரூ.41 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
தீ விபத்து நடந்த இடத்தை சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அமர்சிங் , உத்திரப்பிரதேச முதல்வர் முலாயம் சிங்யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் மற்றும் சமாஜ்வாடி கட்சி எம்.பி. நடிகை ஜெயப்பிரதா ஆகியோர் இன்றுபார்வையிட்டனர்.
அந்த இடத்தில் மலர் வளையம் வைத்து பலியான குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இந்த விபத்தில்பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உத்திர பிரதேச அரசு சார்பில் ரூ. 21 லட்சமும், முலாயம் சிங் யாதவ் சார்பில் ரூ.10லட்சமும் , அமர்சிங் சார்பில் 10 லட்சமும் என மொத்தம் ரூ.41 லட்சத்தை நிவாரண நிதியாக வழங்கினார்கள்.












Click it and Unblock the Notifications