சென்னையில் 10 மாணவ, மாணவிகள் மிஸ்ஸிங்
சென்னை:
சென்னை அயனாவரம் மாநகராட்சிப் பள்ளியில் படித்து வரும் 10 மாணவிகளைக் காணவில்லை என்றுபோலீஸில் புகார் தரப்பட்டுள்ளதால் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை அயனாவரம், செக்ரடேரியேட் காலனி பகுதியில் மாநகராட்சிப் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் 4மாணவர்களும், 5 மாணவிகளும் நேற்று முதல் காணவில்லை என அவர்களது பெற்றோர் போலீஸில் புகார்கொடுத்துள்ளனர்.
இதையடுத்து இணை ஆணையர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல்வேட்டை நடந்தது. அப்போது, இந்த 9 மாணவ, மாணவியரும், லீலாவதி என்ற தங்களுடன் படிக்கும் மாணவியின்வீட்டுக்குச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து லீலாவதியின் தாயாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது 9 மாணவ, மாணவியரும்,லீலாவதியும் சாதாரண உடையில் வெளியே சென்றதாகவும் இன்னும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 9 மாணவ, மாணவியரும் தங்களது வீடுகளில் பெற்றோர் கொடுமைப்படுத்தி வருவதாக தன்னிடம்தெரிவித்ததாகவும் லீலாவதியின் பெற்றோர் தெரிவித்தனர்.
போலீஸாரின் தீவிர விசாரணையில் 10 பேரும் கோவைக்கு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்துபோலீஸ் படை கோவை விரைந்துள்ளது. 10 பேரும் ஊட்டிக்குச் சென்றிருக்கலாம் என போலீஸார்சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications