மதுரை பெஞ்ச் அழைப்பிதழில் ஜெ. பெயர் இல்லை
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழில் முதல்வர் ஜெயலலிதாவின்பெயர் இடம் பெறவில்லை.
ஜூலை 24ம் தேதி, அதாவது சனிக்கிழமை, மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை திறக்கப்படவுள்ளது. இதற்கானஅழைப்பிதழ் தயாராகி விட்டது.
எளிமையாகவும், அதே சமயம் அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள அழைப்பிதழின் மேல்புறம் மதுரைகிளையின் கட்டடம் அச்சிடப்பட்டுள்ளது. இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சி.லஹோட்டி மதுரைகிளையை 24ம் தேதி மாலை 4 மணிக்குத் திறந்து வைப்பார் என அச்சிடப்பட்டுள்ளது.
ஆனால் அழைப்பிதழில் ஜெயலலிதாவின் பெயர் இடம்பெறவில்லை.
இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மத்திய அமைச்சர்களும் கலந்துகொள்வார்கள் என திமுகவைச்சேர்ந்த மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந் நிலையில்,அழைப்பிதழில் முதல்வரின் பெயர் இடம்பெறாதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications